தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் டே உள்ளிட்ட 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளையும் பள்ளி விடுமுறை என அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலியுகவரதன் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளை ஏப்ரல் 18-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரியலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.