தமிழக அரசு பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்து.! 3 பேர் கவலைக்கிடம்.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமிபுரம் பகுதியில் தமிழக அரசு பேருந்து ஒன்றும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து தென்காசி நோக்கி 20 பயணிகளுடன் வந்த தமிழக அரசு பேருந்தும், ராஜபாளையத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி லட்சுமிபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால், அவர்கள்  மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.