தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம்

ஹைதராபாத்: பாகுபலி படப்புகழ் பிரபாஸின் காருக்கு நேற்று ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர்.

ஹைதராபாத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து விதிமுறைகள் அங்கு சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன.

பிரபலங்கள் தவறு செய்தால் கூட உடனடியாக போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, நடிகர் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் உட்பட பல பிரபலங்கள் அபராதம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. விதிமுறைகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது, நம்பர் பிளேட்டில் ஒரே எண் வைத்திருப்பது என விதிமுறைகளை மீறுவோருக்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.

ரூ.1,450 அபராதம்

தற்போது அந்த வரிசையில் பாகுபலி படத்தில் நடித்து புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் பிரபாஸ் போக்குவரத்து போலீஸாருக்கு ரூ.1,450 அபராதமாக செலுத்தியுள்ளார்.

இவரது பென்ஸ் காருக்கு 0009 எண்ணுக்கு பதில், வெறும் 9 எனும் எண் பலகை பொருத்தியிருந்ததால் அவருக்கு ரூ.1,450 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பாகுபலிக்கே அபராதம் விதித்த ஹைதராபாத் போலீஸார் என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.