நிலத்தகராறில் மோதல்- நெல்லையில் 3 பேர் வெட்டிக்கொலை

நெல்லை:
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். 
மோதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.