படகு கவிழ்ந்து 35 பேர் பலி| Dinamalar

கெய்ரோ : லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 35 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியாவின் சப்ரதா நகர் அருகேயுள்ள கடற்பகுதியில், 35 பேருடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மீட்பு படையினர் கடலில் மிதந்த ஆறு சடலங்களை கைப்பற்றினர். 29 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இம்மாதம் மட்டும், லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடல் பகுதியில் பயணித்த, 90க்கும் அதிகமானோர் படகு கவிழ்ந்து இறந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.