வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் அசாதாரண சூழல் குறித்து பாரதப் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். தனது இந்திய வருகை குறித்து பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன், இந்தியா-பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் உறவை மேம்படுத்த தனது இந்த இந்தியா பயணம் உதவிகரமாக இருக்கும் என்றும் சர்வாதிகார நாடுகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக நாடுகளில் ஒற்றுமையை மேம்படுத்த இந்த சந்திப்பில் தான் பாரத பிரதமர் மோடியை வலியுறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற சிக்கலான காலகட்டத்தில் உலகின் முக்கிய பொருளாதார சக்தியாகவும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் ஒத்துழைப்பு எப்போதும் பிரிட்டனுக்கு தேவை என்று அவர் கூறியுள்ளார். ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து இதன் மூலமாக அவர் மறைமுக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திறன் மேம்பாட்டு, ஆற்றல் பாதுகாப்பு, கூட்டு பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பில் தான் மோடியிடம் விவாதிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியா-பிரிட்டன் சுதந்திர வர்த்தக கொள்கை குறித்து விவாதிக்க 26 சந்திப்புகள் நிகழ்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதில் போரிஸ் ஜான்சனின் தற்போதைய இந்திய வருகை நான்காவது சந்திப்பாக அமைந்துள்ளது.
Advertisement