பிஹூ நடனக்குழுவினர் சென்ற வாகனம் கவிழ்ந்தது- 5 பேர் பலி

கவுகாத்தி:
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் பிஹூ நடனக்குழுவினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. நடன  நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு ஊர் திரும்பியபோது கோபூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். 
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதையத்து டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார்  தேடி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.