பெண் போலீஸ் அதிகாரி மரணம் குடும்பத்தினர் கடும் வருத்தம்| Dinamalar

பெங்களூரு-மாரடைப்பால் திடீரென இறந்த பெண் ஏ.சி.பி., ஷோபா, தன் சொந்த ஊரில் பணியாற்ற வேண்டுமென பெரிதும் விரும்பியுள்ளார். அவரின் ஆசை நிறைவேறாமல் போயிற்று என குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.

ஹுப்பள்ளியில் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் ஷோபா கெயிட்வாகர், 53. இவரது தந்தை ஷியாமராவ் தாசில்தாராக இருந்தவர். பட்டப்படிப்பை முடிந்ததும், ஹூப்பள்ளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் கெய்க்வாகரை, ஷோபா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.திருமணமாகி ஆறு ஆண்டு முடிவதற்குள், கணவர் விபத்தில் இறந்து விட்டார். மூன்றரை வயது மகன், ஒன்றரை வயது மகளை கரை சேர்க்க, போலீஸ் துறையில் ஷோபா சேர்ந்தார். 1990ல் சப் — இன்ஸ்பெக்டராக பணியில் அமர்ந்தார்.சமீபத்தில் எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். தற்போது கர்நாடக போலீஸ் பிரிவின் பெங்களூரு சிறப்பு பிரிவில் பணியாற்றி வந்தார்.புட்டேனஹள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இம்மாதம் 15ல் மாரடைப்பால் இறந்தார்.தான் ஓய்வு பெறுவதற்கு முன், சில மாதங்கள் தன் சொந்த ஊரான ஹுப்பள்ளியில் பணியாற்ற வேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார். இவரை வரவேற்க உறவினர்கள், நண்பர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அந்த பெண் அதிகாரியின் கனவு நிறைவேறவில்லை.இந்த தகவலை அவரின் குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.