மரியுபோல் தான் ரஷ்யாவிற்கான சிவப்பு கோடு: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!


உக்ரைனின் மரியுபோல் நகரமே ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தையின் சிவப்பு கோடு என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் பலவாரங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியத்தில் தற்போது மரியுபோலின் அனைத்து நகரப்பகுதிகளையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, உக்ரைனிய பிரதமர் Denys Shmyhal வெளியிட்ட அறிக்கையில், அக்கிரமிக்கப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில் நமது வீரர்கள் இன்னமும் இருப்பதாகவும், அவர்கள் இறுதிவரை போராடுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ரஷ்ய உடனான அமைதி பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, மரியுபோல் நகரமே உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்தைகளுக்கான சிவப்பு எல்லைக்கோடு என உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

மேலும் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்ய ராணுவத்திடம் சரணடையும் உக்ரைனிய வீரர்களுக்கு உயிர் உத்திரவாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் உக்ரைன் நிராகரித்துள்ளது. 

பின்வாங்கிய ரஷ்ய படைகளின் தந்திரம்…கண்ணி வெடிகளால் கதிகலங்கி நிற்கும் உக்ரைன்! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.