தமிழகத்தில் கவர்னர் அறிவித்த தேனீர் விருந்து திமுக-காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியையும் புறக்கணித்தனர்.
இது குறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூ தெரிவிக்கையில்,
“ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது அவசியம் ஆனால் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும் தான் எதிர்க்கட்சிகள் வேலையா?
தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை காரணம் காட்டி புறக்கணித்துள்ளார்கள். அவர்கள் நடத்தும் அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புதுவையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க காரணம் என்ன? பா.ஜனதா எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்று கொள்கையோடு செயல்படுகிறார்கள்.
இதே போன்று, ஜனநாயக நாட்டில் இசைஞானி இளையராஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பு அரசியலை நிச்சயம் மக்கள் விரும்ப மாட்டார்கள்”. என்று பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.