ரன்பீர், அலியா பட்டுக்கு குதிரைகள் பரிசளிப்பு

மும்பை: நீண்ட நாள் காதலர்களான பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் திருமணம் கடந்த 14ம் தேதி மும்பையில் நடந்தது. அவர்களுக்கு திருமணப் பரிசாக மீட்கப்பட்ட குதிரைகள் பரிசளிக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இரு குதிரைகளும் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டவை. திருமண விழா மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் இக்குதிரைகள், உரிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதையறிந்து  குதிரைகளை மீட்ட தனியார் தொண்டு நிறுவனம், அவற்றை ரன்பீர் கபூர், அலியா பட் ஜோடிக்கு பரிசளித்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேஷ் உப்ரேதி கூறுகையில், ‘சக உயிரினங்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காகவே, மீட்கப்பட்ட ஒரு ஜோடி குதிரைகளை ரன்பீர் கபூர், அலியா பட் ஜோடிக்கு பரிசளித்தோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.