ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது

புது டெல்லி:
நடப்பாண்டிற்கான ராணுவ தளபதிகள் மாநாடு இன்று தொடங்கி 22-ந்தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், நாட்டின் எல்லைப் பகுதிகளில் செயல்பாட்டில் இருந்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.  
மேலும் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டு தொழில்நுட்பங்களின் மூலம் ராணுவத்தை நவீனமயமாக்கல், முக்கிய தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ரஷியா – உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பான மதிப்பீடு போன்ற அம்சங்கள் குறித்த விவாதங்களும் இம்மாநாட்டில் இடம் பெறும்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 21-ந் தேதி மாநாட்டில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.