வன விலங்குகளை விரட்ட நவீன கருவி| Dinamalar

திருவனந்தபுரம் : விலங்குகளை விரட்ட, கேரளா வனத்துறை சார்பில், விவசாயிகளுக்கு ‘கார்பைடு கன்’ வழங்கப்படுகிறது.

கேரளாவின், மறையூர் பகுதிகளில், யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள், கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையிலும், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வனத்துறை நவீன கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.’கார்பைடு கன்’ எனப்படும் இந்தக் கருவியில் வனத்துறை வழங்கும் கார்பைடு பொருளை வைத்து, துப்பாக்கி போல் சுட்டால், அதிக ஒலி எழுப்பி, வன விலங்குளை விரட்டியடிக்கிறது.

விலங்குளை விரட்ட, விவசாயிகளும், வனத்துறையினரும் பட்டாசுகளை வெடிக்கும் போது, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வன விலங்களுக்கு தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வாக, கார்பைடு கன் கருவி பயன் தருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.