2022 பாடசாலை முதலாம் தவணை, நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் ,தற்போது நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் கூறினார் .
இருப்பினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பது தொடர்பில் மீண்டும் கவனத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.