நெல்லை அருகே ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே நாஞ்சான் குளத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்குழாய் கிணறு தோண்டும் போது ஏற்பட்ட இந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மேலும் மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.