Tamil News Today Live: கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும் தானா? – தமிழிசை கேள்வி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 11வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu news update: மின்வெட்டு இல்லாத முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

India News Update: பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த மத மோதல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

IPL Update: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
08:54 (IST) 17 Apr 2022
எனது இந்திய பயணம் நல்லுறவை ஏற்படுத்தும்-இங்கிலாந்து பிரதமர்

எனது இந்திய பயணம், இரு நாட்டுக்கும் நல்லுறவை ஏற்படுத்த வழிவகுக்கும். வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களுக்கு உதவியாக அமையும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

08:36 (IST) 17 Apr 2022
தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து

இந்திய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கும் தமிழ்நாடு அணி வெற்றி பெற கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்தனர்.

08:15 (IST) 17 Apr 2022
கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும் தானா? – தமிழிசை கேள்வி

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியதற்கு சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.