அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் படுகொலைகளால் பதற்றம்.. பாலக்காடு பகுதியில் 144 தடையுத்தரவு அமல்

அரசியல் கொலைகள் காரணமாக கேரளத்தின் பாலக்காட்டில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15-ந் தேதி மதியம் 2 மணியளவில் கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்கு சென்று திரும்பிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவரை அவரது தந்தை கண்முன்னே மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பாலக்காடு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, அவர் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து 6 பேர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

தொடர்ந்து கொலை குற்றங்கள் அரங்கேறி வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.