அமைச்சரை கைது செய்யக்கோரி கர்நாடகா முதல்வர் வீடு முற்றுகை: 36 காங். நிர்வாகிகள் மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக அமைச்சரை கைது செய்யக்கோரி முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற 36 காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கர்நாடக மாநில ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் மரணம் தொடர்பான விவகாரத்தில், மாநில அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லம் நோக்கி பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி வேனில் ஏற்றினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்  ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட 36 காங்கிரஸ் தலைவர்கள் மீது ஐபிசி-யின் 341, 143, 103 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.