புதுடில்லி: அரியானா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் முகக்கசவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டில்லியில், 15 நாட்களில், கொரோனா தொற்று பரவல், 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இதையடுத்து, ‘முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது’ என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நேற்று பதிவான 234 கொரோனா பாதிப்புகளில், குருகிராமில் மட்டும் 198 பேருக்கும், பரிதாபாத்தைச் சேர்ந்த 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மூன்று மாவட்டங்களில் கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவைதையடுத்து, இம்மூன்று மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
புதுடில்லி: அரியானா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் முகக்கசவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.டில்லியில், 15 நாட்களில், கொரோனா தொற்று பரவல், 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.