அரியானாவில் மூன்று மாவட்டங்களில் முகக்சவம் கட்டாயம்| Dinamalar

புதுடில்லி: அரியானா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் முகக்கசவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டில்லியில், 15 நாட்களில், கொரோனா தொற்று பரவல், 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இதையடுத்து, ‘முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது’ என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நேற்று பதிவான 234 கொரோனா பாதிப்புகளில், குருகிராமில் மட்டும் 198 பேருக்கும், பரிதாபாத்தைச் சேர்ந்த 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பரிதாபாத், சோனிபட் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மூன்று மாவட்டங்களில் கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவைதையடுத்து, இம்மூன்று மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.