இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு.!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

டக்ளஸ் தேவானந்தா மீன்வளத்துறை அமைச்சராகவும், விமலவீர திசநாயக வனத்துறை அமைச்சராகவும், சன்னா ஜெயசுமனா சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு மத்தியில் இந்த மாத தொடக்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில் 17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.