உலக சுகாதார அமைப்புக்கு அரசு கேள்வி| Dinamalar

புதுடில்லி: கொரோனா மரணங்களை கணக்கிடும் சுகாதார அமைப்பின் நடைமுறை மீது, மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது.

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது முதல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விபரங்களை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது. 40 லட்சம் பேர்இதுவரை 62 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், ‘நியூயார்க் டைம்ஸ்’ என்ற பிரபல அமெரிக்க நாளிதழில் வெளியான உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், 2021வரை, உலகில் 1.5 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் மட்டும் 40 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.மேலும், உயிரிழப்புகளின் தரவுகளை சேகரிக்க கால தாமதம் ஆனதாகவும், அதற்கு இந்தியாவே காரணம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு பதிலடி கொடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கணிதவியல் கோட்பாடுகள் அடிப்படையில், கொரோனா மரணங்களை கணக்கிடும் உலக சுகாதார அமைப்பின் நடைமுறை, இந்தியாவுக்கு ஏற்புடையதாக இல்லை.

புவியியல் அமைப்பு

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையும், வெவ்வேறு புவியியல் அமைப்பும் உடைய ஒரு நாட்டில், இந்த முறையில் மரணங்களை கணக்கிடக் கூடாது.துனிசியா போன்ற சிறு நாடுகளுக்கு பயன்படுத்தப்படும் அதே நடைமுறையில், 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உடைய இந்தியாவிலும் மரணங்களை கணக்கிடுவது என்பது சரியாக இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.