கருணை காட்டாத கனமழை – பலி எண்ணிக்கை 443 ஆக உயர்வு!

தென் ஆப்பிரிக்க நாட்டில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்து உள்ளது.

தென் ஆப்பிரிக்கா
நாட்டில், குவாஜுலு – நேட்டல் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில்
வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள், மின் கம்பங்கள் மற்றும் பல அரசு கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இது பற்றி மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறும்போது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்பட மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதே போல், சாலைகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார். எனினும், வரும் நாட்களில் மாகாணத்தின் சில பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

சொகுசு பங்களாவை செய்தி வாசிப்பாளருக்கு பரிசாக வழங்கிய அதிபர்!

இந்நிலையில், குவாஜுலு – நேட்டல் மாகாணத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 63 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் எதிரொலியாக 500 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும், 100 பள்ளி கூடங்கள் வரை சேதமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.