குருவாயூர் கோயிலில் ஒரேநாளில் 171 திருமணங்கள்

பாலக்காடு: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் உள்ளது. இங்குள்ள கிழக்கு கோபுர நடைபந்தலில் 3 திருமண மண்டபங்கள் உள்ளது. நேற்று (ஞாயிறு) இந்த திருமண மண்டபங்களில் 171 திருமணங்கள் நடைபெற்றது. திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள், கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் கூட்டம் என கோயில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.இவர்கள் தவிர குழந்தைகளின் சாப்பாடு ஊட்டுதல் நிகழ்ச்சிக்காக 974 குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர். இதனால் நெய்விளக்கு வழிபாட்டில் 13 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாயும், துலாபாரத்தில் 27 லட்சத்து 12 ஆயிரத்து 110 ரூபாயும், பால்பாயசம் விற்பனையில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 171 ரூபாயும் மொத்தம் 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.