கொஞ்சமா சாப்பிட்டாலும் வயிறு உப்பிடுதா? இதனை போக்க என்ன செய்யலாம் தெரியுமா?


பொதுவாக நிறைய பேருக்கு இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்திருக்கும் போது வயிறு வீங்கியதாக ஒரு உணர்வு தோன்றும்.

இதற்கு முக்கிய காரணம் நம் குடல் மற்றும் வயிற்றில் வாயுக்கள் நிரம்பியதாலே இந்த பிரச்சினை உண்டாகிறது.

இதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் வயிற்று வலி, வயிற்றில் போக்கு போன்றவற்றை அனுபவிக்க கூடும்.

இதனை ஒரு சில எளிய முறையில் போக்கலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.  

  • ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
    இதில் ஒரு கைப்பிடி அளவு சாதத்தை சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். கஞ்சி போன்ற பதத்துக்கு வந்ததும் எடுத்து குடிக்கலாம். வாய்வுப் பிடிப்பு ஏற்பட்டிருக்கிற சமயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த கஞ்சியைக் குடித்தால் போதும் வாய்வுப் பிடிப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீரும். 

  • இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் 2 பல் பூண்டு ஆகியவற்றை தட்டிச் சேர்த்து கொதிக்க விடுங்கள். இது ஒரு கப் அளவுக்கு சுண்டி வந்த பிறகு அதை ஆறவிட்டு வெதுவெதுப்பாக குடியுங்கள். அதேபோல இரவில் தூங்குவதற்கு முன்பாக, பாலில் பூண்டு பற்கள் 10 சேர்த்து நன்கு வேகவிட்டு குடித்து வந்தாலும் வாயுத்தொல்லை தீரும்.  
  •  ஓமத்தை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை அப்படியே 5 நிமிடங்கள் மூடி வைத்து விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிக்கலாம். அல்லது ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து காலை வேளையில் டீயாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு டம்ளர் புளிக்காத மோரில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் கால் ஸ்பூன் அளவு பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே குடித்து வரலாம். குறிப்பாக, வெயில் காலத்துக்கு வயிற்றுக்கு மட்டுமல்லாது, உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.  
  • ஒரு கப் பூசணிக்காயை நறுக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் சீரகம் கால் ஸ்பூன் சேர்த்து, கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். நன்கு வெந்ததும் சாப்பிடவும்.
  •  வயிறு வீக்கம் மற்றும் வாயுத் தொல்லையால் சிரமப்படுகிறவர்கள் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் என இரண்டு வேளை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் அளவுக்கு ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து குடித்து வர வேண்டும். இப்படி குடித்து வரும்போது நான்கு நாட்களில் வாயுத்தொல்லை நீங்கும். வயிறு வீக்கமும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதை அப்படியே கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.