தயவுசெய்து அதை மட்டும் செய்யாதீர்கள் …ரசிகர்களுக்கு சமந்தா அட்வைஸ்..!

சிம்புவின்
விண்ணை தாண்டி வருவாயா
என்ற படத்தில் துணை நாயகியாக அறிமுகமான
சமந்தா
இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தற்சமயம் பல படவாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் சமந்தா பிஸியான நடிகையாக இருக்கின்றார்.

அடுத்ததாக இவர்
விஜய்
சேதுபதியுடன் நடித்த
காத்துவாக்குல ரெண்டு காதல்
திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சமந்தாவுடன் நயன்தாராவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கமல் வழியில் சிம்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்நிலையில் சமூகத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமல்லாமல் ரசிகர்களுடனும் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்துள்ளார்.

சமந்தா

சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு சமந்தா பள்ளி பயிலும்போது செய்த ஒரு வேலைக்காக 500 ரூபாய் முதல் சம்பளமாக வாங்கியதாக பதிலளித்தார். மேலும் ஒரு ரசிகர் பச்சை குத்துவதை பற்றி கேட்க அதற்கு சமந்தா தயவுசெய்து யாரும் அதை மட்டும் செய்யாதீர்கள்.

சமந்தா

எந்த சூழலிலும் பச்சை குத்தி கொள்ளாதீர்கள் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார் சமந்தா. சில ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா தனது முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் செல்ல பெயரை தன் உடம்பில் பச்சை குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Beast க்கு விஜய் கொடுத்த பூஸ்ட்; மனம் திறக்கும் நெல்சன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.