தருமபுரி: மழைக்காக மரத்தடியில் ஒழங்கிய பொரி வியாபாரிக்கு நேர்ந்த பரிதாபம்

ஒகேனக்கல்லில் மரத்தடியில் நின்றிருந்த பொரி வியாபாரி மீது இடிதாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
image
இந்நிலையில், இன்று ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அர்த்தனாரி என்பவர், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் மரத்தடியில் பொரி வியபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் அங்கிருந்த மரத்தடியில் ஒதுங்கியுள்ளார்.
அப்போது திடிரென இடி மரத்தின் மீது இறங்கியதால், மரத்தடியில் இருந்த அர்த்தனாரி மீது இடி தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒகேனக்கல் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
image
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இடிதாக்கி பொரி வியாபரி உயிரிழந்த சம்பவம், சுற்றுலா பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.