பன்னாட்டு நிதியத்திடம் உதவி கோரும் இலங்கை| Dinamalar

கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன.இதனால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். நிதி நெருக்கடியை சமாளிக்க பன்னாட்டு நிதியத்திடம், இலங்கை அரசு உதவி கோர உள்ளது. அதற்காக நிதி அமைச்சர் அலி சாப்ரி தலைமையிலான குழுவினர், அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர்.நாளை முதல், 24ம் தேதி வரை அமெரிக்காவில் தங்க இருக்கும் அந்த குழுவினர், ஐ.எம்.எப்., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அவர்களிடம், 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கோர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.