புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்| Dinamalar

புதுடில்லி: புதிய ராணுவ தலைமை தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்ஜினியர் ஒருவர் இப்பொறுப்பை ஏற்கவிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.

ஜெனரல் பிபின் ராவத் இறப்புக்கு பின், இந்திய முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராகவும், ராணுவ தலைமை தளபதியாகவும் இருந்து வரும், எம்.எம்.நரவானே வரும் 30ம் தேதி ஓய்வு பெறவிருக்கிறார். இதனையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.

latest tamil news

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை, புதிய ராணுவ தலைமை தளபதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பொறுப்பை ஏற்கவிருக்கும் முதல் இன்ஜினியர் பாண்டே என்பது குறிப்பிடித்தக்கது. தற்போது துணை ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தளபதியாக பணியாற்றி உள்ளார். நரவானே ஓய்வுக்குப்பின், ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.