ராணிப்பேட்டையில் தந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்த மகன் கைது.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மந்திரிப்பதற்காக தர்காவிற்கு அழைத்து சென்ற தந்தையை வீடு திரும்பியதும் மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இக்பால் என்ற 70 வயது முதியவர் தனது இரண்டாவது மகன் இம்ரானுடன் வேப்பூரில் வசித்து வந்தார். தாயார் உயிரிழந்தது முதல், பிரம்மை பிடித்தது போல் காணப்பட்ட இம்ரானை, அவரது தந்தை அவ்வப்போது தர்காவிற்கு அழைத்து சென்று மந்திரித்து வந்துள்ளார்.

இன்றும் அவ்வாறு மந்திரித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இனிமேல் தன்னை மந்திரிப்பதற்காக தர்காவிற்கு அழைத்து செல்ல வேண்டாம் என இம்ரான் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றவே இம்ரான், வீட்டில் இருந்த கத்தியால் இக்பாலின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் இம்ரானை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.