“183 நாள்கள் பயணம்; நட்சத்திரங்களைத் தொட்டு வந்தேன் என மகளிடம் சொல்வேன்"- சீன விண்வெளி வீராங்கனை

சீனா தனி விண்வெளி நிலையத்தை (space station) உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தின் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, நிலவிற்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது சீனா. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி சென்ஸு-13 (Shenzhou-13) விண்கலம் மூலம் சை ஜிகாங் (Zhai Zhigang), எ குவாங்க்பு (Ye Guangfu) என்ற இரண்டு ஆண்கள், வாங் யாப்பிங் (Wang Yaping) என்ற பெண் என மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் 183 நாட்கள் சுமார் 6 மாதங்கள் தங்கியிருந்து விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு தற்போது வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளனர். இதுவரை சீனா 8 முறை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அதில் இதுவே மிக நீண்ட காலத் திட்டம் என்று கூறப்படுகிறது.

விண்வெளி சென்ற மூன்று விண்வெளி வீரர்கள்.

இதில் விண்வெளிக்குப் பயணித்து அதிக நேரம் விண்வெளியில் இருந்த முதல் பெண் விண்வெளி வீரர் மற்றும் விண்வெளியில் நடைபயணம் (space walk) மேற்கொண்ட முதல் சீன விண்வெளி வீரர் என்ற பெருமைக்குரியவர் ‘வாங் யாப்பிங்(Wang Yaping)’. தனது விண்வெளிப் பயணம் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசிய அவர், ‘தன் மகளைப் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. இப்போது என் மகளைப் பார்த்தல் அம்மா நட்சத்திரங்களைத் தொட்டு வந்தேன் என்று கூறுவேன்’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.