புதுடெல்லி:
நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் 517 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் பாதிப்பு 500-ஐ தாண்டியது. அங்கு 6,492 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 501 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதிப்பு விகிதம் 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அரியானாவில் 234, உத்தரபிரதேசத்தில் 115, மிசோரத்தில் 99 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 527 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 928 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 11 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 11,860 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 318 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 16,89,995 டோஸ்களும், இதுவரை 186 கோடியே 72 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,01,909 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.25 கோடியாக உயர்ந்தது.