இசையமைப்பாளர் இளைய ராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், சட்ட மேதை அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளதாவது: இந்தியாவின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசை அமைப்பாளரின் கருத்துக்கள் ஒரு கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் விருப்பம் இல்லாத வகையில் இருந்ததால், தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து வார்த்தைகளால், அவரை இழிவுபடுத்துகின்றனர். இளையராஜாவை அவமதிப்பது தான் ஜனநாயகமா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளைய ராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், சட்ட மேதை அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது தமிழகத்தில் சர்ச்சையை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.