இளையராஜாவை அவமதிப்பதா?| Dinamalar

இசையமைப்பாளர் இளைய ராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், சட்ட மேதை அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளதாவது: இந்தியாவின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசை அமைப்பாளரின் கருத்துக்கள் ஒரு கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் விருப்பம் இல்லாத வகையில் இருந்ததால், தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து வார்த்தைகளால், அவரை இழிவுபடுத்துகின்றனர். இளையராஜாவை அவமதிப்பது தான் ஜனநாயகமா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.