என் கைகளிலேயே உயிர் போயிடுச்சு: சோகத்தில் த்ரிஷா

த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தெருவில் ஆதரவின்றி திரியும் நாய்கள் மீது கருணை காட்டுமாறும், முடிந்தால் எடுத்துச் சென்று வளர்க்குமாறும்
த்ரிஷா
தொடர்ந்து கூறி வருகிறார்.

பீட்டா அமைப்பில் இருக்கும் த்ரிஷா தற்போது சோகத்தில் இருக்கிறார். அதற்கு காரணம், அவர் வளர்த்து வரும் நாய்களில் ஒன்று இறந்துவிட்டது தான்.

ஜனா என்கிற
பிளாக்கி
ஏப்ரல் 16ம் தேதி இறந்துவிட்டது. பிளாக்கிக்கு இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு த்ரிஷா கூறியிருப்பதாவது,

எங்கள் டார்லிங் ஜனா/பிளாக்கி இறந்துவிட்டது. ஜனா எங்கள் வீட்டில் இருந்தது எங்களுக்கு கவுரவம். மேலும் அது என் கைகளில் கண்ணை மூடியது மிகப் பெரிய கவுரவம். என் தேவதை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டும் த்ரிஷா வீட்டு செல்லம் ஒன்று இறந்தது. அதன் பெயர் கேட்பரி. சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது கேட்பரியை பார்த்து தத்தெடுத்தார்.

இழப்பு குறித்து அறிந்த ரசிகர்கள் த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். கெரியரை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில்
பொன்னியின் செல்வன்
படத்தில் குந்தவையாக நடித்திருக்கிறார் த்ரிஷா. நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயை விட த்ரிஷா தான் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் தான் நடித்த சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் த்ரிஷா. அந்த படத்தை நிர்மல் குமார் இயக்கியிருக்கிறார்.

விஜய்யை அடுத்து தனுஷுக்கும் அதே பிரச்சனை: கொந்தளிக்கும் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.