தென்னாபிரிக்காவில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனம்

தென்னாபிரிக்காவில் அனர்த்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 443 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள், வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட கட்டடங்களும், மின்; கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி அனர்த்த அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.