நிதிப்பற்றாக்குறை: பாகிஸ்தானில் மின் உற்பத்தி பாதிப்பு

மின் உற்பத்திக்கு நிலக்கரி, இயற்கை எரிவாயு வாங்க போதிய நிதி இல்லாததால் பாகிஸ்தான் அரசு, வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன், ரஷ்யா போர் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி விநியோக குறைபாடுகளால் கடந்த 9 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானின் எரிசக்தி கொள்முதல் செலவு 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி, இயற்கை எரிவாயு என மின் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவு போதிய நிதியின்மையால் 3 ஆயிரத்து 500 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆப்லைன் உற்பத்தி முறையிலும் இதே குளறுபடிகள் நீடிப்பதாக புதிய அமைச்சரவையின் நிதி அமைச்சர் மிப்தா இஸ்மயில் தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.