பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் இன்று இடம்பெறும்.

முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை இதுவரை நிறைவு பெறாத பாடசாலைகளில் மாத்திரம் தரம் ஒன்றுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தாமதம் அடையலாம் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தாமதம் அடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை நேற்று ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.