புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் குடும்பத்தினருக்கு இடமில்லை| Dinamalar

கொழும்பு : இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், நேற்று 17பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக, தன் குடும்பத்தினர் யாரையும் அவர் அமைச்சராக்கவில்லை. பிரதமராக மகிந்த ராஜபக்சே மட்டும் நீடிக்கிறார். நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பல நெருக்கடிகளுக்கு ஆளாகிஉள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிபரும், பிரதமரும் பதவி விலகக் கோரி, அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, 3ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து, 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே, ஏற்கனவே நியமித்த நான்கு அமைச்சர்களுடன், புதிதாக 17 பேரை அமைச்சர்களாக நியமித்துள்ளார். அவர்கள் நேற்று பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் ராஜபக்சே குடும்பத்தினர் இடம் பெறாததால், மக்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுமா அல்லது தொடருமா என தெரியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.