இலங்கை வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை



மயக்க மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் விபத்துக்கள் தொடர்பான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.