இன்று முதல் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று (21) முதல் மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை நீக்க கடந்த 18 ஆம் திகதி (2022.04.18) சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளாவிய ரீதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடுவதன் காரணத்தினால் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.