ஒலிபெருக்கி விவகாரம் சிவசேனா கோரிக்கை | Dinamalar

மும்பை-‘ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவது தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்கி, அதை டில்லியிலும், குஜராத்திலும் முதலில் அமல்படுத்த வேண்டும்’ என, பிரதமருக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு பற்றி, பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கியுள்ளன.ஒலிபெருக்கிகள் பயன்பாடு தொடர்பாக, தேசிய அளவில் கொள்கை ஒன்றை உருவாக்க, பிரதமரை சிவசேனா கேட்டுக் கொள்கிறது. அக்கொள்கையை, முதலில் டில்லி மற்றும் குஜராத்தில் அமல்படுத்த வேண்டும். அதன் பின், மஹாராஷ்டிராவில் அமல்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.