நடிகர்
தனுஷ்
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்
வாத்தி
படத்தில் நடித்து வருகின்றார். இதுதவிர செல்வராகவனின்
நானே வருவேன்
, மித்ரன் ஜவஹர் இயக்கும் திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும்
திருச்சிற்றம்பலம்
படத்தின் அறிவிப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. எனவே படக்குழுவிடம் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.
வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் பிரபலம்..!
எப்படி அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்தார்களோ அதே நிலை தான் தற்போது தனுஷ் ரசிகர்களுக்கும் வந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க படத்திலிருந்து சில காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதனால் அப்சட்டில் இருக்கும் படக்குழு விரைவில் திருச்சிற்றம்பலம் படத்தின் அறிவிப்பை வெளியிடுவார்கள் என பேசப்பட்டுவருகின்றது. இருப்பினும் பொறுமையை இழந்த தனுஷ் ரசிகர்கள் பார்க்கும் அனைவரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர்.
தனுஷ்
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த மூன்று நாயகிகளில் ஒருவரான ப்ரியா பவானி ஷங்கர் சமூகத்தளத்தில் தன் புகைப்படத்தை பதிவிட்டார். அவர் புகைப்படத்தை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே தனுஷ் ரசிகர்கள் அனைவரும் அவரிடம் அப்டேட் கேட்க ஆரபித்தனர்.
ப்ரியா பவானி ஷங்கர்
இதுவரை சன் பிக்சர்ஸ் மற்றும் தனுஷிடம் மட்டுமே ரசிகர்கள் சமூகத்தளங்களில் அப்டேட் கேட்டு வந்த நிலையில் தற்போது ப்ரியா பவானி ஷங்கரிடமும் தனுஷ் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Anchor-ஐ கலாய்த்த பிரியா பவானி சங்கர்!