நிலச்சரிவில் இருந்து தப்பிக்க 20 மணி நேரம் பிரிட்ஜுக்குள்ளேயே இருந்து உயிர்பிழைத்த சிறுவன்..!

பிலிப்பைன்ஸில் மெகி புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ஃபிரிட்ஜுக்குள் நுழைந்துகொண்ட சிறுவன் பத்திரமாக உயிர்தப்பியுள்ளான்.

கிட்டத்தட்ட 20 மணி நேரம் அவன் ஃபிரிட்ஜுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. லேய்ட் மாகாணத்தில் உள்ள பேபே நகரத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் இருந்து தப்பித்துக்கொள்ள சிஜே ஜஸ்மே என்ற 11 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜுக்குள் சென்று நுழைந்துகொண்டுள்ளான்.

மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது குளிர்சாதனப்பெட்டி ஒன்று கிடந்ததை பார்த்த மீட்புப்படையினர் அதை திறந்து பார்த்த போது உள்ளே சிறுவன் இருப்பதை கண்டுபிடித்தனர். 

நிலச்சரிவில் சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் மாயமாகி இருப்பதாகவும், சிறுவனின் தந்தை உயிரிழந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.