பிரித்தானியாவில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் திகதி கிரேட்டர் மான்செஸ்டரின் ஹெய்வுட்டில் உள்ள ஒரு வீட்டில் Felicity-May எனும் பிறந்து இரண்டு வாரங்களே ஆன பெண் குழந்தை உயிருக்கு போராடியது.
சம்பவ இடத்துக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 3 நாட்கள் கழித்து ஜனவரி 11-ஆம் திகதி உயிரிழந்தது.
குழந்தையை, அவரது தந்தையே கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் Wardle, Birch சாலையை சேர்ந்த 25 வயதாகும் Darin Harvey (தந்தை) மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்று நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட் அவர் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Felicity-May Harvey Image: GMP
உடல் ரீதியாக சில சவால்களுடன் பிறந்த அந்த குழந்தை அம்மா, சகோதரிகள் மற்றும் மற்ற குடும்பத்தினரால் பெரிதும் நேசிக்கப்பட்டுள்ளார். குழந்தையை அவர்கள் ‘ஏஞ்சல்’ என்றே அழைத்துவந்துள்ளனர். குழந்தையின் இழப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையின் இழப்பழ மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.