சிறுமிக்கு பாலியல் தொல்லை : 86 வயது முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

Tamilnadu News Update : அரியலூர் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 86 வயது முதியவருக்கு சாகுவரை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி நாயுடு (86). இவர் கடந்த 2020-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லகூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன் சிறுமியின் நடவடிக்கையை பார்த்த அவரது தாயார் இது குறித்து விசாரித்தபோது, முதியவர் குப்புசாமி நாயுட குறித்து சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குப்புசாமியை போக்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குப்புசாமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குப்புசாமி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் 86 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.