உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு படை குறித்து விசாரணை: ரஷ்யா அறிவிப்பு!


செய்தி சுருக்கம்:

  • உக்ரைனில் பிரித்தானிய இராணுவ செயல்பாடுகள் குறித்து ரஷ்யா விசாரணை
  • உயரடுக்கு இராணுவ படை குறித்த தகவல் வெளியிட முடியாது பிரித்தானியா அறிவிப்பு

உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு ராணுவ படைப் பிரிவு செயல்பட்டு வருவதாக ரஷ்ய ஊடகம் வெளியிட்ட அறிக்கை அடிப்படையாக கொண்டு விசாரணை செய்ய இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது.

உக்ரைனின் மேற்குப் பகுதி நகரான லிவிவ்-வில் பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு இராணுவ படை ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி ஊடகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், பிரித்தானியாவின் சிறப்பு விமான சேவையின் உயரடுக்கு இராணுவ படை உக்ரைனில் இருந்து உக்ரைனிய ராணுவ படைக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதாகவும், அந்த நாட்டின் மேற்கு பகுதியில் நேரடியான ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ரஷ்ய செய்தி ஊடகம் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு உக்ரைனில் விசாராணை மேற்கொள்ள இருப்பதாக ரஷ்ய சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: புதினை நேரில் சந்திக்க நான் தயார்… ஆனால் ஒருவர் கொல்லப்பட்டாலும் முடிந்தது ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!

தங்களது சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நோட்டோ நாடுகள் தலையிட கூடாது என ரஷ்யா எச்சரித்து வரும் நிலையில், பிரித்தானிய உயரடுக்கு இராணுவ படை குறித்த விசாரணையை ரஷ்யா நடத்தப்போகிறது, ஆனால் எவ்வாறு இந்த விசாரணை நடத்தப்படும் என்பது போன்ற தகவல்களை ரஷ்யா வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதுதொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், உயரடுக்கு இராணுவ படை குறித்து எந்த தகவலும் வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கதில் உக்ரைனின் ராணுவ வீரர்களுக்கு தொட்டி எதிர்ப்பு ஆயுதங்கள் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை பிரித்தானிய ராணுவம் வழங்கியதாகவும், ஆனால் ரஷ்ய போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு பிரித்தானிய சிறப்புப் படை வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளது. 

இந்த செய்திக்கான வளம்:  Reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.