மற்றோரு பெண்ணுடன் தொடர்ப்பு.. தந்தையை கொன்ற மகன்.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

வேறொரு பெண்ணுடன் தொடர்ப்பில் இருந்த தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், புளியங்குளம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு திருமணாகி வசந்தா என்ற மனைவியும் மகனும் உள்ளனர். கருப்பசாமிக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த வசந்தா தனியே வாழ்ந்து வந்துள்ளார். மேலும், ஓய்வூதிய பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மகன் தங்களிடம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கருப்பசாமி மறுக்கவே இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த கருப்பசாமியை அங்குள்ள கோவிலுக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சுரேஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.