இரண்டாவது சுற்றில் வெற்றி: மீண்டும் பிரான்ஸ் அதிபராகும் இமானுவேல் மேக்ரோன்!

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரோனின் பதவி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து அந்நாட்டுக்கான 12ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில், தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான
இமானுவேல் மேக்ரோன்
வலதுசாரி வேட்பாளரான
மரின் லி பென்
ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

அதில், இமானுவேல் மேக்ரோன் 27.85 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு அடுத்த இடத்தை மரின் லி பென் பிடித்தார். யாருக்கும் 50 சதவீதம் என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இமானுவேல் மேக்ரோன் – மரின் லி பென் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், இமானுவேல் மேக்ரோன் 58 சதவீதம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட – மரின் லி பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தொடரும் போர்: ரஷ்யா, உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஐநா பொதுச்செயலர்!

இதன்மூலம், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இமானுவேல் மேக்ரோன் பிரான்ஸ் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இமானுவேல் மேக்ரோன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். தற்போதைய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் உள்ள ஒருவர் மீண்டும் தேர்வாகிய பெருமையை இமானுவேல் மேக்ரோன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.