புதிதாக பிறந்த பேத்தியை வீட்டிற்கு அழைத்துவர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த புனே விவசாயி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநகரில் உள்ள பலேவாடி பகுதியை சேர்ந்தவர் அஜித் பாண்டுரங் பல்வத்கர். விவசாயியான இவரது மகனுக்கு சமீபத்தில் க்ருஷிகா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. அஜித் பாண்டரங் பேத்தி பிறந்த உற்சாகத்தில் இருந்து வந்துள்ளார்.

குழந்தை பிறந்தவுடன் ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது. தற்போது, அங்கிருந்து குழந்தையையும், தாயையும் திரும்ப வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

குழந்தை க்ருஷிகாவுக்கு பிரமண்டமான வரவேற்பு அளிக்க விரும்பிய அஜித் பாண்டுரங், ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்னர், ஷெவால் வாடியில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் இருந்து பேத்தியையும், மருமகளையும் அஜித் பாண்டுரங் ஹெலிகாப்டரில் அழைத்து வந்துள்ளார்.
பேத்திக்காக அஜித் பாண்டுரங் எடுத்த இந்த பிரம்மாண்ட முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்.. பிரியங்காவை தலைவராக்க பிரசாந்த்கிஷோர் விரும்பினார்- காங்கிரசில் இணையாதது குறித்து புதிய தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.