உக்ரைன் – ரஷ்ய போர் இன்னும் 10 ஆண்டு நீடிக்கும்: பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர்

லண்டன்: உக்ரைன் – ரஷ்ய போர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்குமென பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வெளியுறவுத்துறை மாநாட்டில் பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளர் லிஸ் டிரஸ் கலந்துகொண்டார். அப்போது கடந்த பிப்.,24ம் தேதி துவங்கி நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் போர் குறித்துப் பேசிய அவர், ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

குண்டர்களை இயக்கும் கொடூரமான இயக்குனர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சித்த அவர் ஐரோப்பிய நாடுகள் இன்னும் பல ஆண்டு காலத்துக்கு நடைபெற உள்ள இந்த போருக்கு தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை தற்போது கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ஜெலன்ஸ்கி அரசு சளைக்காமல் போர் புரிந்து வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.