ஐபிஎல் 2022- கொல்கத்தா அணியை 146 ரன்களில் கட்டுப்படுத்தியது டெல்லி

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.
டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். 
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.